Home நாடு 1எம்டிபி விவகாரத்தில் தொடர்பு: இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியது சிங்கப்பூர்!

1எம்டிபி விவகாரத்தில் தொடர்பு: இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியது சிங்கப்பூர்!

786
0
SHARE
Ad

1MDBசிங்கப்பூர், ஜூலை 22 – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறை இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள பணம், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு கடந்த ஜூலை 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது” என சிங்கப்பூர் காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும், அந்த இரு வங்கிக் கணக்குகளும் யாருடையது என்ற விவரத்தை இன்னும் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்..