Home Featured நாடு “மக்களை முட்டாளாக்க வேண்டாம்” – அரசாங்கத்தை விமர்சித்த ஜோகூர் சுல்தான்!

“மக்களை முட்டாளாக்க வேண்டாம்” – அரசாங்கத்தை விமர்சித்த ஜோகூர் சுல்தான்!

671
0
SHARE
Ad

sultan-johor1கோலாலம்பூர் – தற்போது நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளை மூடி மறைக்க, கனிவான வார்த்தைகளால் பூசி மொழுகி மக்களை முட்டாளாக்க வேண்டாம் என அரசாங்கத்தை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரிங்கிட் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியாளர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றாலும், தனது மாநிலத்தில் வாழும் மக்களின் நலனிலும், வளமான வாழ்விலும் தனக்கு முக்கியப் பொறுப்பு உண்டு என்றும் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்றைய நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட அதன் மதிப்பில் கால் பங்கு சரிந்துவிட்டதை சுட்டிக் காட்டியுள்ள சுல்தான், விரைவில் அதற்கு தீர்வு கண்டே ஆக வேண்டிய நிலையில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.