Home உலகம் இலங்கையில் நல்லிணக்கம் உருவாகப் பாடுபடுவதாக சிறிசேனாவுக்கு ஒபாமா பாராட்டு!

இலங்கையில் நல்லிணக்கம் உருவாகப் பாடுபடுவதாக சிறிசேனாவுக்கு ஒபாமா பாராட்டு!

564
0
SHARE
Ad

MS-Obama-un-2நியூயார்க் – ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்து உபசாரத்திற்கு இடையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அமெரிக்க அதிபர்  ஒபாமாவைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசினார்.

அப்போது ஒபாமா, இலங்கையின் மக்களாட்சிக்கு வலுவூட்டும் விதத்தில் மைத்திரிபால சிறிசேனா பல ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பாராட்டினார்.

#TamilSchoolmychoice

அதற்கு மைத்திரிபால சிறிசேனா நன்றி தெரிவித்ததோடு,  போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டு வந்து நாட்டை முன்னேற்றுவதற்குப் பாடுபடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.