Home உலகம் எதிரி நாடுகளை அணுகுண்டு சுனாமி மூலம் அழிக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்!

எதிரி நாடுகளை அணுகுண்டு சுனாமி மூலம் அழிக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்!

533
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_64469110966பெர்லின் – எதிரி நாடுகளை ‘அணுகுண்டு சுனாமி’ மூலம் அடியோடு அழிப்பதற்கான பெரும் சதித் திட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீட்டியிருப்பதாகத் திடுக்கிடும் தகவலை ஜெர்மன் பத்திரிகையாளர் ஜர்ஜென் டோடென்ஹோபெர் எனபவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை நேரடியாகச் சந்தித்த முதல் பத்திரிகையாளர் இவராவார். இவர் கடந்த ஆண்டு வடக்கு ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் சில நாடகள் தங்கியிருந்தார்.

அமெரிக்காவின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதக் கூடியவர் என்பதால் இவரை மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளே நுழைய அனுமதித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

aisஇவர் ‘Inside IS Ten Days In The Islamic State’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள திடுக்கிட வைக்கும் தகவல்கள் என்னவெனில்: நான் பார்த்தவரையில் மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பு இருக்கிறது. அவர்கள் வெறும் மனித தலைகளை வெட்டுபவர்கள் மட்டுல்ல.

மதத் தூய்மை வாதம் என்னும் கொடூர வியூகத்தை வைத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது அதிகாரப்பூர்வ தத்துவம்.மதத்தூய்மைவாதம் என்ற பெயரில் பல நூறு கோடி மக்களை அழித்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஷியாக்கள், யாசிதிகள், இந்துக்கள், நாத்திகர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்ற வெறித்தனம் அவர்களிடத்தில் இருக்கிறது.

ஐ.எஸ். இயக்கத்தைப் பொருத்தவரையில் இந்த ஒட்டுமொத்த உலகையே கைப்பற்ற வேண்டும்; உலகம் முழுவதும் இஸ்லாமிய தேசத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் திட்டம். இதற்காக ஐ.எஸ். இயக்கம் “அணுஆயுத சுனாமி” மூலம் பேரழிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.