Home உலகம் சடலத்தை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றிய மெக்டொனால்ட்!

சடலத்தை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றிய மெக்டொனால்ட்!

679
0
SHARE
Ad

1mcdonaldsஹாங் காங் – ஹாங் காங்கில் பிரபல சங்கிலித் தொடர் உணவகமான மெக்டொனால்ட், சமீபத்தில் அங்கு மிகப் பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளது. அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்த ஆதரவற்ற பெண்மணி ஒருவர், அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசையிலேயே மரணமடைந்திருக்க அதனை உணவக பணியாளர்கள் பல மணி நேரங்களாக கவனிக்காமல் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாங் காங்கின் கொவ்லூன் நகர காவல்துறைக்கு கடந்த 3-ம் தேதி காலை, அந்நகரத்தில் இருக்கும் மெக்டொனால்ட் உணவக பணியாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், தங்கள் உணவகத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் கூறப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்மணியை சோதனை செய்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

mcdonalds pic1இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் பல மணி நேரங்களுக்கு முன்பே இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வயோதிகம் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பல மணி நேரங்களாக ஒருவர் இறந்து கிடந்துள்ள நிலையில், மெக்டொனால்ட் பணியாளர்கள் அங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவதிலேயே கவனம் செலுத்தியுள்ளது, அந்நகர மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.