Home உலகம் 38,000 அடி உயரத்தில் தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு பிறந்த குழந்தை

38,000 அடி உயரத்தில் தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு பிறந்த குழந்தை

468
0
SHARE
Ad

indexதென்னாப்பிரிக்கா,மார்ச்.12-தென்னாப்பிரிக்க பெண்ணொருவருக்கு 38,000 அடி உயரத்தில் குழந்தையொன்று பிறந்துள்ளது. தென்னாப்பிரிக்க பெண்ணான படவுமாடா காபா, ஜோகன்ஸ்பெர்க்கிலிருந்து நியூயார்க் நோக்கி விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நடுவானத்தில் பிரசவ வலி ஏற்படவே விமானத்திலிருந்த இரண்டு மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

இதனால் இக்குழந்தை 38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பிறந்தது. அந்த விமானத்தில் இருந்த விமானிகள், பயணிகள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் மகிழ்ச்சியடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவ்விமானம் நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் தாயையும் சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கணவர் காம்பியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வான் பரப்பில் குழந்தை பிறந்தாலும் அந்நாட்டு குடியுரிமை அந்தக் குழந்தைக்கு வழங்கப்படமாட்டாது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.