Home Featured நாடு வல்லினம் கலை இலக்கிய விழா 7: ஓவியக் கண்காட்சி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன!

வல்லினம் கலை இலக்கிய விழா 7: ஓவியக் கண்காட்சி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன!

599
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வல்லினம் ஒவ்வொரு ஆண்டும் கலை இலக்கிய விழா என்ற நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது. அதன் படி இந்த ஆண்டு கலை இலக்கிய விழா 7, எதிர்வரும் நவம்பர் 1-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், மலாயாப் பல்கலைக்கழகத்திலுள்ள ஆசியான் ஆர்ட் மியூசியம் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

vallinam

இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

1.மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன்

2.அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை (கட்டுரை தொகுப்பு) – அ.பாண்டியன்

3.துணைக்கால் (கட்டுரை தொகுப்பு) – விஜயலட்சுமி

4.ஒளி புகா இடங்களின் ஒலி (பத்திகள்) – தயாஜி

மேலும் இந்நிகழ்வுக்கென தமிழகத்திலிருந்து பல முக்கியமான ஆளுமைகள் வருகின்றனர்.

1.ஆதவன் தீட்சண்யா – (புதுவிசை இதழின் ஆசிரியர். எழுத்தாளர், கவிஞர்)

2.எழுத்தாளர் இமையம் – (கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ – போன்ற பல முக்கிய நாவல்களை எழுதியவர்.)

3.வ.கீதா – (எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.)

4.ஓவியர் டிராட்ஸ்கி மருது (தமிழகத்தின் மிகச்சிறந்த ஓவியர்)

இத்துடன் இந்நிகழ்வை சிறப்பிக்க இம்முறை ‘தோட்டமும் வாழ்வும்’ என்ற கருப்பொருளில் மலேசிய ஓவியர் சந்துருவின் ஓவியக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு குறித்த அனைத்து விபரங்களுக்கும் ம.நவீன் 0163194522 -ஐத் தொடர்பு கொள்ளவும்.