Home Featured இந்தியா பீகார் சட்டமன்றம்: புதிய எம்எல்ஏ-க்கள் 98 பேர் மீது கொலை வழக்குகள்!

பீகார் சட்டமன்றம்: புதிய எம்எல்ஏ-க்கள் 98 பேர் மீது கொலை வழக்குகள்!

607
0
SHARE
Ad

gangs-of-biharபீகார் – பீகார் சட்டசபைக்குத் தேர்வாகி உள்ள 243 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) பற்றிய விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.

மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 143 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்றும், அவர்களில் 98 எம்எல்ஏ-க்கள் மீது கொலை, கற்பழிப்பு போன்ற பயங்கர குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ததன்யாதவ் மீது மட்டும் அதிகபட்சமாக 28 வழக்குகள் உள்ளன. கிரிமினல் குற்றச்சாட்டு எம்எல்ஏ-க்களில் 70 சதவீதம் பேர் தண்டனை பெறும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.