Home Featured இந்தியா கங்கைக் கரையில் மோடி – ஷின்சோ அபே! இந்தியாவுக்கு ஜப்பானின் புல்லட் இரயில்!

கங்கைக் கரையில் மோடி – ஷின்சோ அபே! இந்தியாவுக்கு ஜப்பானின் புல்லட் இரயில்!

696
0
SHARE
Ad

வாரணாசி – இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நரேந்திர மோடியின் அடுத்த கனவுத் திட்டமான புல்லட் இரயில் எனப்படும் அதிவேக விரைவு இரயில் திட்டம் இந்தியாவுக்குள் வருவதற்கு வித்திட்டுள்ளார்.

மும்பாய்-அகமதாபாத் நகர்களுக்கு இடையிலான முதல் புல்லட் இரயிலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும், கையெழுத்திட்டுள்ளனர்.

Modi-Shinzo Abeதனது வருகையின் ஒரு பகுதியாக இன்று நரேந்திர மோடியுடன் ஷின்சோ அபே வாரணாசி நகருக்கு வருகை தந்து அங்கு கங்கைக் கரையில் வண்ணமயமான விளக்குகளுடன் நடைபெறும் பிரபலமான கங்கா ஆர்த்தி எனப்படும் தீபாராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

Ganga River Bank-Shinzo Abe visit

ஷின்சோ அபேயின் வருகையை முன்னிட்டு இன்று வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கங்கைக் கரை – கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியின் போது…

Ganga River-Bank-Shinzo Abe

இன்று கங்கைக் கரையில் பிரபலமான  கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, மோடியுடன் வருகை தருவதை முன்னிட்டு, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ள கங்கைக் கரைப் பகுதி