Home உலகம் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்து பலவீனப்படுத்த இந்தியா கடும் முயற்சி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்து பலவீனப்படுத்த இந்தியா கடும் முயற்சி

438
0
SHARE
Ad

india-sri-lanka-flags2இந்தியா,மார்ச்,13-ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் திருத்தங்களைச் செய்வது தொடர்பாக, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை திருத்தவும், திமுக கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கும் சமநிலையை ஏற்படுத்துவதற்கு தற்போது இந்தியா போராடுவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

#TamilSchoolmychoice

அதேவேளை, அமெரிக்க தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை கண்டறியும் திட்டத்தை புதுடெல்லி ஆதரிக்கவில்லை.