Home Featured நாடு தாய்லாந்து சுற்றுலா சென்றவர்கள் சடலங்களாகத் திரும்பி வந்த துயரம் – பத்து பகாட்டில் சோகம்!

தாய்லாந்து சுற்றுலா சென்றவர்கள் சடலங்களாகத் திரும்பி வந்த துயரம் – பத்து பகாட்டில் சோகம்!

641
0
SHARE
Ad

பத்து பகாட் – கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தின் சியங்மாய் நகரில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் அடங்கிய சவப்பெட்டிகள், நேற்று தனிவிமானம் மூலம் ஜோகூர் கொண்டு வரப்பட்டு, பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

chuaஇரண்டு சவப்பெட்டிகள் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டதாகவும், 11 சவப்பெட்டிகள் அங்கிருந்த 3 இறுதிச்சடங்குக் கூடங்களில் வைக்கப்பட்டதாகவும் ‘த ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள் அனைவரும் பத்து பகாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் சோகம் சூழ்ந்திருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

மகிழ்ச்சியோடு சுற்றுலா சென்ற உறவினர்கள், சடலங்களாகத் திரும்பி வந்துள்ளதைக் கண்ட உறவினர்கள் சோகத்தில் கண்ணீர் சிந்திய காட்சி மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.

படம்: நன்றி (The Star)