Home Featured தொழில் நுட்பம் 140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்குகிறோம் – டுவிட்டர் தலைவர் உறுதி!

140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்குகிறோம் – டுவிட்டர் தலைவர் உறுதி!

608
0
SHARE
Ad

twitterகோலாலம்பூர் – டுவிட்டரில் 140 எழுத்துக்களுக்குள் தான் பயனர்கள் தங்கள் பதிவுகளை இட வேண்டும் என்ற வரம்பினை டுவிட்டர் நீக்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதனை டுவிட்டர் தலைவர் ஜேக் டோர்சே நேற்று உறுதி செய்துள்ளார்.

நட்பு ஊடகங்களில் பதிவுகளை இடுவதில் சற்றே வித்தியாசமான வரம்பினை கொண்டிருப்பது என்றால் அது டுவிட்டர் தான். பயனர்கள் எத்தகைய பதிவுகளையும் 140 எழுத்துக்களுக்குள் சுருக்கி பதிவு செய்ய வேண்டும். பயனர்களின் ஆக்கத்திறனுக்கு இந்த வரம்பு பெரிய வேலை கொடுத்தாலும், பல சமயங்களில் எரிச்சலைடையச் செய்துவிடும்.

பல தருணங்களில் மனதில் நினைத்தை சுதந்திரமாக பதிவு செய்ய முடியாமல், இந்த வரம்பு இருப்பதாக பயனர்கள் தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அந்த வரம்பினை டுவிட்டர் நீக்குவதற்கு பரிசீலனை செய்துவருவதாக செய்திகள் வெளியாகின.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று டுவிட்டர் தலைவர் ஜேக் டோர்சே வெளியிட்டுள்ள பதிவில் அதனை உறுதி செய்துள்ளார்.

“பயனர்களுக்குத் தேவையான பயன்பாடுகளை டுவிட்டரில் சேர்பதற்கு எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. மக்களுக்கு எது தேவையோ அதனைக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.