Home Featured இந்தியா பதன்கோட்டில் மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவலா?

பதன்கோட்டில் மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவலா?

431
0
SHARE
Ad

pathankot-attackபதன்கோட் – பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் மீண்டும் தீவிரவாதிகள் ஊருவி இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இராணுவத்தினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப்படைத்தளத்தில் இன்று மாலை, சந்தேகத்திற்குரிய வகையில் மர்மநபர் ஒருவர் உலா வந்ததாகவும், அவரைக் கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடு தான் காரணம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.