Home Featured தமிழ் நாடு திருவாரூரில் போட்டி – கருணாநிதி சூசக அறிவிப்பு!

திருவாரூரில் போட்டி – கருணாநிதி சூசக அறிவிப்பு!

816
0
SHARE
Ad

Karunanithi-to thiruvarur by train-திருவாரூர் – மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவாரூர் வந்த திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்தத் தொகுதியான திருவாரூருக்கு வந்திருந்தார். காட்டூரில் உள்ள தன் தாயார் அஞ்சுகம் நினைவிடத்தில், மலர் அஞ்சலி செலுத்திய அவர், நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், திருவாரூரில் போட்டியிடுவது குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

அவரது பேட்டியில், “மக்கள் விரும்பினால், திருவாரூர் சட்டசபை தொகுதியில், நான் மீண்டும் போட்டியிடுவேன். சட்டசபை தேர்தலில், திமுக-விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.கோவில் கருவறையில் முதல்வர் படம் வைத்திருப்பது, மூட நம்பிக்கைகளில் ஒன்று. திமுகவில் தயாராகி வரும் தேர்தல் அறிக்கை, ஜனநாயகத்தை மையப்படுத்தியதாக இருக்கும். தேர்தலில் கூட்டணி என்பது வெறுக்கத்தக்கது அல்ல; வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

கருணாநிதி, திருவாரூரில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.