Home Featured நாடு 2015-ல் மலேசிய குடியுரிமையைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2015-ல் மலேசிய குடியுரிமையைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

591
0
SHARE
Ad

malaysian-passportகோலாலம்பூர் – 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2015 -ம் ஆண்டு மலேசிய குடியுரிமையை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு 1,787 பேர் மலேசிய குடியுரிமையைக் கைவிட்டனர் என்றும், 2015 -ம் ஆண்டு அது மேலும் அதிகரித்து 2,206 பேர் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர் என்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) தலைமை செயல் அதிகாரி ஷாரில் ரிட்சா ரிட்சுவான் தெரிவித்துள்ளார்.

இது சற்று உயர்வு தான் என்றாலும், கடும் மோசம் என்று சொல்வதற்கு அல்ல என்று ஷாரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice