Home Featured உலகம் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாராப் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் பயணம்!

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாராப் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் பயணம்!

638
0
SHARE
Ad

கராச்சி – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாராப் கடந்த சில வாரங்களாக தனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக இரகசியமாக துபாய் சென்றுள்ளார்.

ஆனால், அவருக்கு என்ன விதமான உடல் நலக் குறைவு என்பது குறித்து தகவல்கள் இல்லை.

Musharrafதகவல் ஊடகங்களின் கவனங்களைத் தவிர்த்து, முஷாராப் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். எமிரேட்ஸ் விமானத்தில் சென்ற அவரை, விமானத்திற்குள் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு, தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, முஷாராப்பின் துபாய் வருகை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஒரு பச்சை நிற டி-சட்டையில் சாதாரணமாக நல்ல உடல் நிலையோடுதான் முஷாராப் பயணம் மேற்கொண்டார் என அந்தப் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்படுவதற்கு வெகுநேரத்திற்கு முன்பே முஷாராப் வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு கிளம்பி விட்ட காரணத்தால், பத்திரிக்கையாளர்கள் அவரது பயணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

விமான நிலையத்திலும், அவர் வழக்கமாக பயணிகள் செல்லும் பாதையில் செல்லாமல், விமானப் பணியாளர்கள் செல்லும் வாயிலின் வழி சென்றதால், யாரும் அவரை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.

முஷாராப்புக்கு முன்பே அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் துபாய் சென்றடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

சில வழக்குகளின் காரணமாக, பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பாகிஸ்தான் உச்சமன்றம் அண்மையில் முஷாராப்புக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கமும் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியிருக்கின்றது.