Home நாடு தியான் சுவா கார் மீது தாக்குதல்

தியான் சுவா கார் மீது தாக்குதல்

447
0
SHARE
Ad

Tian_Chua-TMIபினாங்கு, மார்ச் 16- பி.கே.ஆரின் உதவித் தலைவரான தியான் சுவாவின் காரை வழிமறித்த 50 க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல், அவரை இந்த மாநிலத்தின் எதிரி என்று கூறி கோஷங்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் காரை உதைத்து, கண்ணாடியின் மீது தலைக் கவசங்களை வீசி எறிந்து அவருக்கு எதிராக மிக அநாகரிகமான செயல்களைச் செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் பினாங்கில் பி.கே.ஆர் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்துவிட்டு  தியான் சுவா வெளியேறிய போது நடந்துள்ளது.

லகாட் டத்துவில் சுலு படையினரின் ஊடுருவலுக்கு அம்னோ தான் காரணம் என்று தியான் சுவா கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கடந்த வியாழக்கிழமை அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் நடப்பதற்கு முன்னர், இரவு விருந்தில் பேசிய தியான் சுவா, சுலு படையினரின் ஊடுருவலைக் கண்டித்து அரசாங்கத்தை விமர்சித்த தன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த தேசிய முன்னணி அரசு, இனவெறியைத் தூண்டும் வகையில் பேசிய பெர்காசா தலைவர்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்றும், தன் மீது அவர்கள் எவ்வளவு அவதூறுகளைச் சுமத்தினாலும்,சுலு ஊடுருவலுக்கு  அம்னோ தான் காரணம் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேற்கண்ட செய்தி மலேசியாகினி இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.