Home Featured தமிழ் நாடு கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை!

கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை!

954
0
SHARE
Ad

Jayenthirar-Kanchi Sangarachariyarசென்னை – கணக்காய்வாளர் (ஆடிட்டர்) ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் இன்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

2002இல் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நடந்த முறைகேடுகளை கணக்காய்வாளர் இராதாகிருஷ்ணன் பகிரங்கப்படுத்தியிருந்ததைத் தொடர்ந்து அவர் ஒரு சம்பவத்தில் தாக்கப்பட்டார்.