Home Featured நாடு ரிடுவான் பற்றித் தகவல் அளித்தால் 5000 ரிங்கிட் – மஇகா இளைஞர் பிரிவு அறிவிப்பு!

ரிடுவான் பற்றித் தகவல் அளித்தால் 5000 ரிங்கிட் – மஇகா இளைஞர் பிரிவு அறிவிப்பு!

963
0
SHARE
Ad

Indira Gandhi newகோலாலம்பூர் – பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபன் எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரிங்கிட் சன்மானம் வழங்கவிருப்பதாக மஇகா இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா, எப்எம்டி இணையதளத்திடம் கூறுகையில், “ரிடுவானைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறை கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில், வழக்குகளைக் கையாள்வதில், சிறந்த காவல்துறையினருக்கான தர வரிசையில் மலேசிய காவல்துறையும் இடம்பிடித்திருக்கும் நிலையில், தலைமறைவாகியிருக்கும் ரிடுவானை நிச்சயம் கண்டறிய முடியும் என்றும் சிவராஜா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், காவல்துறைக்கு உதவும் வகையில், ரிடுவானைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவு 5000 ரிங்கிட் ரொக்கம் சன்மானம் வழங்கும் என்றும் சிவராஜா அறிவித்துள்ளார்.

 ரிடுவானைப் பற்றிய தகவல் தெரிந்தால், அரவிந்த் (03-4043 1111, 010 221 1881) அல்லது சீலன் (016 597 9438) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறும் சிவராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த உத்தரவில், மகள் பிரச்சன்னா திக்சாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தத் தவறிய ரிடுவானைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதனையடுத்து, ரிடுவான் மாயமாகிவிட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் காவல்துறை கூறி வருகின்றது.