Home Featured நாடு வெளிநாடுகளில் நஜிப்புக்கு எதிராகப் பேசினால் எனது கடப்பிதழை இரத்து செய்வார்கள்!

வெளிநாடுகளில் நஜிப்புக்கு எதிராகப் பேசினால் எனது கடப்பிதழை இரத்து செய்வார்கள்!

562
0
SHARE
Ad

Tun Mahathirசுங்கை பெசார் – வெளிநாடுகளில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராகப் பேசினால், தன்னுடைய கடப்பிதழை இரத்து செய்வோம் என குடிநுழைவு இலாகா அதிகாரிகள் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட் இன்று தெரிவித்துள்ளார்.

சுங்கை பெசாரில் இன்று கூட்டமொன்றில் பேசுகையில், “நஜிப்புக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்து வந்தால், நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் என்னுடைய கடப்பிதழை மூன்று ஆண்டுகளுக்கு இரத்து செய்வதாக என்னை எச்சரித்தார்கள்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice