Home Featured உலகம் ஒலிம்பிக் தீப நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுத்தை – விலங்குகள் அமைப்பு கடும் கண்டனம்!

ஒலிம்பிக் தீப நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுத்தை – விலங்குகள் அமைப்பு கடும் கண்டனம்!

572
0
SHARE
Ad

jaguar olympicரியோ டே ஜெனிரோ – பிரேசில் அமேசான் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் தீபமேற்றும் நிகழ்ச்சியில், இடம்பெற்றிருந்த ஜாகுவார் வகை சிறுத்தைப் புலி, அதன் பராமரிப்பாளரின் கட்டுப்பாட்டை மீறி தப்பித்துச் செல்ல முயற்சி செய்த போது, அங்கிருந்த இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, இராணுவப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மிருகக்காட்சி சாலையைச் சேர்ந்த அந்த ஜாகுவாரை,  நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த இராணுவ வீரர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கில் சுட்டுக் கொன்றுள்ளார்.

“அமைதியையும், ஒற்றுமையையும் பறைச்சாற்றும் ஒலிம்பிக் தீப நிகழ்ச்சியில், ஒரு பக்கம், சிறுத்தை ஒன்றை சங்கிலியால் கட்டி காட்சிக்கு வைக்க அனுமதித்தது எங்களின் தவறு தான். எங்களின் நம்பிக்கைகள் மற்றும் மதிப்புக்கு எதிராக அது அமைந்துவிட்டது. ரியோ 2016-ல் இது போன்ற தவறுகள் இதற்கு மேலும் நடக்காது என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்” என்று அந்நாட்டு இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது சர்ச்சையாகியுள்ள இந்த விவகாரம் குறித்து, உலகின் பல்வேறு விலங்குகள் உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.