Home Featured நாடு பூச்சோங் குண்டுவெடிப்பில் ஐஎஸ் சம்பந்தப்பட்டுள்ளது – காலிட் அறிவிப்பு!

பூச்சோங் குண்டுவெடிப்பில் ஐஎஸ் சம்பந்தப்பட்டுள்ளது – காலிட் அறிவிப்பு!

629
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-Wideகோலாலம்பூர் – கடந்த ஜூன் 28-ம் தேதி, பூச்சோங்கில் மோவிடா இரவு கேளிக்கை விடுதியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்புலமாக ஐஎஸ் இயக்கத்தின் சதிச் செயல் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.

இது குறித்து கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், “எங்களுடைய விசாரணையின் முடிவில், இந்தச் சம்பவத்திற்குப் பின்புலமாக ஐஎஸ் இயக்கத்தின் சதி இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 15 பேரை காவல்துறை கைது செய்திருப்பதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice