Home Featured நாடு பினாங்கில் மீண்டும் இந்து ஆலய சிலைகள் உடைப்பு!

பினாங்கில் மீண்டும் இந்து ஆலய சிலைகள் உடைப்பு!

941
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் குளுகோர் வட்டாரத்தில் உள்ள ஓர் இந்து ஆலயத்தில் உள்ள இந்து தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்)  தெரிவித்துள்ளார்.

Ramasamy-கடந்த இரண்டு மாதங்களில் இந்து ஆலய சிலை உடைப்பு நடைபெறுவது இது நான்காவது முறையாகும்.

துங்கு குடின் பகுதியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில்கள் உடைக்கப்பட்டிருப்பதை அந்த ஆலயத்தின் குருக்கள் இன்று காலை 5.30 மணியளவில் கண்டனர்.

#TamilSchoolmychoice

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சிவலிங்கம், மற்றும் பிரதான வழிபாட்டுச் சிலையான முனீஸ்வரர் ஆகிய 3 தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டனர்.

இந்த சிலைகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கும், ஆலயத்தை சீரமைப்பதற்கும் சுமார் ஒரு இலட்சம் ரிங்கிட் வரை செலவாகலாம் என மதிப்பிட்டிருக்கும் துணை முதல்வர் இராமசாமி, “4 மாதங்களில் பினாங்கில் மட்டும் 4 இந்து சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது ஏன்? பினாங்கு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்கா? அல்லது இது ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய இயக்கங்களின் தாக்குதலா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.