Home Featured நாடு கோலாலம்பூர் மாநகரசபை நிர்வாக இயக்குநர் மீது 18 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர் மாநகரசபை நிர்வாக இயக்குநர் மீது 18 குற்றச்சாட்டுகள்!

599
0
SHARE
Ad

DBKL Image

கோலாலம்பூர் – டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகரசபையின் திட்ட நிர்வாகத்திற்கான நிர்வாக இயக்குநர் சைட் அஃபெண்டி அலி சைட் அபிட் அலி மீது நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இவற்றில் 9 குற்றச்சாட்டுகள் ஊழல் தொடர்புடையவை. எஞ்சிய 9 குற்றச்சாட்டுகள் பண இருட்டடிப்பு (money-laundering) தொடர்புடையவையாகும். இவற்றில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த பணத்தின் மதிப்பு 4.4 மில்லியன் ரிங்கிட்டாகும்.

#TamilSchoolmychoice

54 வயதான சைட் அஃபெண்டி அலி குற்றங்களை மறுத்து விசாரணை கோரினார்.

சைட் அஃபெண்டியின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளும் இந்த வழக்கு தொடர்பில் முடக்கப்பட்டுள்ளன.

அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட்டுக்கான பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டு, அவரது அனைத்துலகக் கடப்பிதழும் முடக்கப்பட்டுள்ளது.

சைட் அஃபெண்டியின் மேல் முறையீட்டுக்கு ஏற்ப முதல் கட்டமாக 4 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையை செலுத்துவதற்கும், மீதி 6 இலட்சம் ரிங்கிட்டை எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் செலுத்துவதற்கும் நீதிபதி அனுமதி அளித்தார்.