Home Featured நாடு நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!

நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!

646
0
SHARE
Ad

Anina Najibகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான வழக்கில், முன்னாள் லங்காவி அம்னோ உறுப்பினர் அனினா சாடுடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டது. காரணம் அனினா அம்னோ உறுப்பினர் கிடையாது. அதோடு, அவர் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுடன் இணைந்து புதிய வழியில் தனது போராட்டத்தைத் தொடரவுள்ளார் என்று அனினாவின் வழக்கறிஞர் மொகமட் ஹனீப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.