Home Featured நாடு டாக்டர் பவுசியா உட்பட சிறைபிடிக்கப்பட்ட அனைத்துப் பேராளர்களும் விடுவிப்பு!

டாக்டர் பவுசியா உட்பட சிறைபிடிக்கப்பட்ட அனைத்துப் பேராளர்களும் விடுவிப்பு!

673
0
SHARE
Ad

the-zaytouna-oliviaகோலாலம்பூர் – இஸ்ரேல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகில் இருந்த 11 பேராளர்களும் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

மலேசிய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ‘மைகேர்’ (Humanitarian Malaysian Care (MyCare) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், மலேசியப் பேராளர் டாக்டர் பவுசியா மொகமட் ஹசான் உட்பட அனைத்துப் பேராளர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

‘காசா செல்லும் மகளிர் படகு – Women’s Boat to Gaza’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், காசாவில் இஸ்ரேல் முற்றுகையை எதிர்க்கும் வகையில் பாலஸ்தீன மக்களுக்கு உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தி அக்கப்பல் சென்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த புதன்கிழமை, அப்படகு இஸ்ரேல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.