Home Featured தமிழ் நாடு ஆளுநர் மாளிகையின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் வரவேற்பு!

ஆளுநர் மாளிகையின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் வரவேற்பு!

603
0
SHARE
Ad

stalin-mk-dmkசென்னை – தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவில் இருப்பதால், அவர் பொறுப்பில் இருந்த இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என ஆளுநர் மாளிகை நேற்று அறிவித்தது.

அதன்படி, அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை வகித்திடுவார் என்றும், முதல் அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் இந்த அறிவிப்பிற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “தமிழக நலன் கருதி திமுக வலியுறுத்திய கருத்தையொட்டி முதல்வரின் பொறுப்புகளை நிதியமைச்சர் கவனிக்க ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது!