Home Featured இந்தியா சேலை அணிந்து ஆலயம் சென்று வழிபட்ட இங்கிலாந்துப் பிரதமர்!

சேலை அணிந்து ஆலயம் சென்று வழிபட்ட இங்கிலாந்துப் பிரதமர்!

1046
0
SHARE
Ad

theresa-story_647_110916114640பெங்களூர் – இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே, கடைசி நாளான இன்று புதன்கிழமை பெங்களூரிலுள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரா ஆலயத்திற்கு சேலை அணிந்து சென்று வழிபட்டார்.

பச்சை நிறத்தில் ஜரிகைகளுடன் கூடிய அழகிய சேலையில் வந்த தெரேசா மே, இரண்டு குருக்கள் உடன் வர, பூஜைக்குத் தேவையான பழங்கள், பூ மாலைகள் ஆகியவற்றுடன் பட்டுத் துணி ஒன்றையும் தட்டில் எடுத்துச் சென்று வழிபாடு செய்தார்.

theresa-mos_647_110916114525

#TamilSchoolmychoice

இந்த மூன்று நாள் பயணத்தில் இந்தியாவுடன் பல கோடி மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்களில் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.