Home இந்தியா திமுக அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பு

திமுக அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பு

465
0
SHARE
Ad

karunanithiபுது தில்லி, மார்ச்.20- நேற்று மத்திய ஆளும் அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து  இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த திமுக அமைச்சர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்தனர்.

முன்னதாக, கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை நேற்று இரவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.