Home Featured இந்தியா ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடித் தீர்ப்பு கிடையாது – உச்சநீதிமன்றம் கைவிரிப்பு!

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடித் தீர்ப்பு கிடையாது – உச்சநீதிமன்றம் கைவிரிப்பு!

883
0
SHARE
Ad

supreme-court-of-india1புதுடெல்லி – ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்த கோரிக்கையை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கில், தீர்ப்பு இப்போது தான் எழுதப்பட்டு வருவதால், பொங்கல் பண்டிகைக்கு முன் இடைக்காலத் தீர்ப்பு வழங்க முடியாது என அறிவித்தது.