Home Featured தமிழ் நாடு எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த சசிகலா!

எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த சசிகலா!

717
0
SHARE
Ad

sasikala-mgr statuteசென்னை – இன்று செவ்வாய்க்கிழமை எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் இல்லமான இராமாவரம் தோட்டம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு எம்ஜிஆர் நினைவு இல்லமாக இன்று பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இராமாவரம் தோட்ட இல்லத்தில்தான் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதிக் காலத்தைக் கழித்தார். இராமாவரம் தோட்டத்திற்கு இன்று வருகை தந்த சசிகலா, அங்கு அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்தார்.

முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார் (மேலே படம்).

#TamilSchoolmychoice

sasikala-opening mgr statuteஇராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த சசிகலா…

பின்னர் இராமாவரம் தோட்டத்தில் இயங்கி வரும் காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு வருகை தந்து அங்கு பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கினார்.

அங்குள்ள மாணவர்களுக்கு விருந்துபசரிப்பு நடத்தியதோடு, அவர்களோடு சேர்ந்து விருந்திலும் சசிகலா பங்கு கொண்டார்.

sasikala-mgr souvenir bookஅதிமுக தலைமைக் கழகத்தில் எம்ஜிஆர் சிலையின் முன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மலரை சசிகலா வெளியிட்டார்.

sasikala-mgr birthday-panneer selvamதமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் இருவரும் இணைந்து எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை வெளியிட்டனர்.