Home Featured நாடு சுபாங் ஜெயாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் மரணம்!

சுபாங் ஜெயாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் மரணம்!

765
0
SHARE
Ad

USJ2சுபாங் ஜெயா – இன்று திங்கட்கிழமை அதிகாலை சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.

காலை 5.34 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறை, 6 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயலாக்க அதிகாரி மொகமட் ஹிசாம் சித்திக் தெரிவித்தார்.

இந்நிலையில், தீவிபத்து ஏற்பட்ட வீட்டில், படுக்கையறையில் இரு சடலங்களும், மற்றொரு அறையில் 1 சடலமும், கழிவறையில் ஒரு சடலமும் காணப்பட்டதாகவும் மொகமட் ஹிசாம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மீட்கப்பட்ட நான்கு சடலங்களும் செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.