Home Featured இந்தியா சென்னை வருகிறார் பிரணாப் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை வருகிறார் பிரணாப் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

601
0
SHARE
Ad

Pranab-Mukherjeeசென்னை – தாம்பர விமானப்படைத் தளத்தில் நாளை மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருக்கும், சிறந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மார்ச் 2-ம் தேதி சென்னை வருகிறார்.

அவரது வரவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

டில்லியில் இருந்து கேரளா செல்லும் பிரணாப் முகர்ஜி, பின்னர் அங்கிருந்து இன்று இரவு விமானப்படை விமானத்தில் சென்னை வருகிறார்.

#TamilSchoolmychoice

கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பிரணாப் தங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.