Home Featured தமிழ் நாடு மீனவர் சுட்டுக் கொலை: ராமேஸ்வரம் மக்கள் தொடர் போராட்டம்!

மீனவர் சுட்டுக் கொலை: ராமேஸ்வரம் மக்கள் தொடர் போராட்டம்!

996
0
SHARE
Ad
fishermen2-07-1488868563ராமேஸ்வரம் – ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ, தனது சகாக்களுடன், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் குண்டுக் காயங்கள் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில், பிரிஜ்ஜோவைச் சுட்டுக் கொன்ற கடற்படையினரைக் கைது செய்யும் உடலை வாங்க மாட்டோம் என அவரது ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும், மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றநிலை நீடித்து வருகின்றது.
இந்நிலையில், பிரிட்ஜ்ஜோவின் உடலில் பாய்ந்திருப்பது ஏ.கே.47 இரக துப்பாக்கிக் குண்டு என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. கழுத்தில் குண்டு பாய்ந்து சுமார் 1 மணி நேரம் உயிருக்குப் போராடிய நிலையில் பிரிஜ்ஜோ இறந்திருப்பது அவருடன் உடன் சென்ற மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இது குறித்து மண்டபம் காவல்நிலையத்தில் மீனவர்கள் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.