Home நிகழ்வுகள் பத்தாங் பெர்ஜூந்தையில் ‘தமிழச்சிக்கு தமிழர்களின் குரல்’ நிகழ்வு

பத்தாங் பெர்ஜூந்தையில் ‘தமிழச்சிக்கு தமிழர்களின் குரல்’ நிகழ்வு

538
0
SHARE
Ad

ambigaபத்தாங் பெர்ஜுந்தை, மார்ச்.22- எதிர்வரும் 24.3.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பத்தாங் பெர்ஜூந்தை பொது மண்டப வளாகத்தில் சிலாங்கூர் மாநில  மந்திரி பெசார் தலைமையில் நடைபெறும் ‘தமிழச்சிக்கு தமிழர்களின் குரல்’  எனும் நிகழ்வில் டத்தோ அம்பிகா உரையாற்றுவார்.

கோலாசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சூல்கிப்ளி, சட்ட மன்ற உறுப்பினர் முத்தையா, செக்கிஜான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லின், இஞ்சே ரஷிட் ஆகியோர் கலந்து கொள்வர்.

பிற்பகல் 3 மணி முதல் கலை நிகழ்ச்சிகளும் அதிர்ஷ்டக் குலுக்கும் நடைபெறும். இந்நிகழ்வுக்குத் திரளான மக்கள் கூடுவர் என்று கோலாசிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.