Home Featured தமிழ் நாடு இரட்டை இலை விவகாரம்: பொதுக்குழு ஆதரவு இருப்பதாக சசி தரப்பு விளக்கம்!

இரட்டை இலை விவகாரம்: பொதுக்குழு ஆதரவு இருப்பதாக சசி தரப்பு விளக்கம்!

586
0
SHARE
Ad

Sasikalaபுதுடில்லி – அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். அதற்கு சசிகலா தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவும், கடந்த வாரம் ஓபிஎஸ் தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு அளித்தார்.

ஓபிஎஸ் மனுவிற்கு சசிகலா தரப்பு இன்று மார்ச் 21-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி, சசி தரப்பு இன்று அளித்த பதிலில் தங்களுக்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அதன் அடிப்படையில் நாளை புதன்கிழமை, ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினரை தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசவிருக்கின்றது.