Home Featured தமிழ் நாடு வழக்குகளை ஒத்தி வைக்க முடியாது – தினகரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

வழக்குகளை ஒத்தி வைக்க முடியாது – தினகரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

551
0
SHARE
Ad

TTV Thinakaranசென்னை – ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை, தன் மீதான 5 வழக்குகளை ஒத்தி வைக்கக் கோரி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தினகரனின் மனுவை விசாரணை செய்த குற்றவியல் நீதிமன்றம் அவ்வழக்குகளை ஒத்தி வைக்க முடியாது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.

இங்கிலாந்தில் தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கியது தொடர்பாக, கடந்த 1996-ம் ஆண்டு, தினகரன் மீது அமலாக்கத்துறையினர் 7 வழக்குகள் தொடுத்தனர். அதில் இரண்டு வழக்குகளில் இருந்து தினகரன் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice