Home Featured வணிகம் விஜய் மல்லையா பிணையில் விடுதலை!

விஜய் மல்லையா பிணையில் விடுதலை!

783
0
SHARE
Ad

vijay mallaiyaஇலண்டன் – கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்தில் பிரபல இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக இத்தகைய வழக்குகள் பிரிட்டன் நீதிமன்றங்களில் நடந்து முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக்  கொண்டுவரும் நடவடிக்கைகள் நிறைவு பெற நீண்ட காலம் பிடிக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.