Home Featured நாடு 528-வது தமிழ்ப் பள்ளி சுங்கைப்பட்டாணியில் உதயம்!

528-வது தமிழ்ப் பள்ளி சுங்கைப்பட்டாணியில் உதயம்!

678
0
SHARE
Ad

Subramaniam-kamalanathan-combo

சுங்கைப்பட்டாணி – நாட்டின் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 530-ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் கால கட்டத்தில்,  கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி நகரில் தாமான் கிளாடியில் இன்று திங்கட்கிழமை 528-வது தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகின்றது.

18 வகுப்பறைகளையும், மேலும் சில வசதிகளையும் கொண்ட இந்தத் தமிழ்ப் பள்ளி 18 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து சிறப்பிப்பார்.

கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் தாமான் கிளாடி தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வார்.