Home Featured நாடு 2 மணி நேரமாக பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ஆடவர்!

2 மணி நேரமாக பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ஆடவர்!

856
0
SHARE
Ad

Policethiefகோத்தா கினபாலு – நேற்று புதன்கிழமை, இரவு 7.30 மணியளவில் கோத்தா கினபாலுவில் அமைந்திருக்கும் தாமான இஸ்திமேவா என்ற பகுதியில் உள்ள வீட்டில், திருடுவதற்காக நுழைந்த பிலிப்பினோ ஆடவர், தான் பொதுமக்களிடம் சிக்கிக் கொள்ளப் போவதை அறிந்தவுடன், வீட்டின் உரிமையாளரை கத்தி முனையில் சுமார் 2 மணிநேரங்கள் சிறைப் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

24 வயதுப் பெண்ணான வீட்டின் உரிமையாளரை, கத்தியைக் கழுத்தில் வைத்து சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடத்திச் சென்றான்.

அப்போது அங்கு காவல்துறையினர் அவனிடமிருந்து அப்பெண்ணை விடுவிக்க இரண்டு மணி நேரமாகப் போராடினர். அதோடு அவனிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

#TamilSchoolmychoice

பலமுறை அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான்.

இந்நிலையில், சரியான சந்தர்ப்பத்தில் காவல்துறை அவனைத் தடுத்து அப்பெண்ணை அவனிடமிருந்து மீட்டதாக கோத்தா கினபாலு நகர துணைக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் ஜார்ஜ் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.