Home Featured தமிழ் நாடு சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

704
0
SHARE
Ad

chennai silksசென்னை – சென்னை திநகரில் உள்ள பிரபல துணிக்கடையான ‘சென்னை சில்க்ஸ்’ கடையில் தீ விபத்து ஏற்பட்டு, 7 மாடிக் கட்டிடத்தில் இருந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அப்பகுதி அபாயகரமான பகுதியாக காவல்துறை அறிவித்திருக்கிறது. தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுவரை கட்டிடத்திற்குள் இருந்த 11 பேர் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice