Home Featured இந்தியா கர்ணனின் தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

கர்ணனின் தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

899
0
SHARE
Ad

karnan-judge-புதுடெல்லி – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறைத் தண்டனையை இரத்து செய்யக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், உச்சநீதிமன்றத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் குறித்த புகார் ஒன்றை பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஊழல் புகார் சுமத்திய கர்ணனின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில், கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்ததோடு, அவரைக் கைது செய்ய மேற்குவங்க காவல்துறைக்கும் உத்தரவிட்டது.

எனினும், நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.