Home Featured உலகம் லண்டன் வாகனம் மோதிய சம்பவம்: தெரேசா மே வருத்தம்!

லண்டன் வாகனம் மோதிய சம்பவம்: தெரேசா மே வருத்தம்!

1006
0
SHARE
Ad

லண்டன் – லண்டன் செவன்சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள மசூதியில், தொழுகை முடித்துவிட்டுத் திரும்பிய பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இது ஒரு மோசமான சம்பவம். காயமடைந்தவர்களுக்கும், அவர்களது அன்பிற்குரியவர்களுக்கும் எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பவ இடத்தில் அவசரச் சேவைப் பிரிவினர் வேகமாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice