Home இந்தியா மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தினகரனுடன் சந்திப்பு

மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தினகரனுடன் சந்திப்பு

829
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – அதிமுக கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்திருப்பதைத் தொடர்ந்து இதுவரையில் தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது.

மொடக்குறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியம் தினகரனைச் சந்தித்திருப்பதால், அதிமுகவில் அடுத்த என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு கூடியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் மீண்டும் இணைந்து ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்த முனைந்துள்ளனர் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னணியில் நடந்து வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தினகரனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பல்வேறு ஆரூடங்கள் நிலவுகின்றன.

#TamilSchoolmychoice

தனது நிலைப்பாட்டை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பின்னர் அறிவிக்கப் போவதாக தினகரன் தெரிவித்திருக்கிறார்.