Home நாடு அன்வாரை விடுவிக்கும் நடவடிக்கையில் மகாதீர்!

அன்வாரை விடுவிக்கும் நடவடிக்கையில் மகாதீர்!

914
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளை இன்னும் 1 வாரத்தில் தொடங்கவிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான விண்ணப்பத்தை சட்ட ரீதியாகப் பின்பற்றுவோம் என இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.