Home இந்தியா முட்டை ஊழலை அம்பலப்படுத்திய கமல்!

முட்டை ஊழலை அம்பலப்படுத்திய கமல்!

557
0
SHARE
Ad

kamalசென்னை – நடிகர் கமல்ஹாசன் அண்மைய காலமாக, அரசுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகின்றார்.

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், ஊழல் செய்யாத அமைச்சர் இந்தியாவிலேயே இல்லை என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கமலின் அண்மைய டுவிட்டர் பதிவில் பெரம்பலூரில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல். இயக்கத்திற்குப் பெருமையே.எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப் படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது?” என்று கமல் டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.