Home நாடு இசா சமட் பிணையில் விடுதலை!

இசா சமட் பிணையில் விடுதலை!

678
0
SHARE
Ad

Mohd-Isa-Abdul-Samadகோலாலம்பூர் – பெல்டா முதலீட்டு நிறுவனத்தில் சார்பில் தங்கும் விடுதிகள் வாங்கிய வழக்கில், மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் இசா சமட், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

புத்ராஜெயா நீதிமன்றத்தில் நேற்று அவரது வழக்கை விசாரணை செய்த நீதிபதி சைனல் அபிடின், 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் தனிநபர் பிணையிலும், 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இரு நபர் உத்தரவாதத்தின் பேரிலும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.