Home நாடு சித்திரவதை வழக்கு: செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சித்திரவதை வழக்கு: செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

748
0
SHARE
Ad

Nhaveensodomisedcaseஜார்ஜ் டவுன் – 2 சிறார் உட்பட 4 இளைஞர்களால், டி. பிரவின் கடுமையாக அடித்துச் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அமர்வு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

பிரவினின் மருத்துவ அறிக்கைக்காக அரசுத் தரப்பு காத்திருப்பதாக அரசாங்க துணை வழக்கறிஞர் பாரா ஐமி சைனும் அன்வார் கூறியதையடுத்து, நீதிபதி இர்வான் சுயைபான் செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனிடையே, பிரவின் துன்புறுத்தப்பட்ட அதே இடத்தில், 18 வயதான நவீனை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்ததாகவும், இந்த நான்கு இளைஞர்கள் மீது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice