Home இந்தியா தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள்! ஆட்சி கவிழுமா?

தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள்! ஆட்சி கவிழுமா?

825
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – கடந்த திங்கட்கிழமை அதிமுகவின் இரு துருவங்களாகச் செயல்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்றாக இணைந்ததைத் தொடர்ந்து அதிரடி மாற்றமாக டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர்.

இதனால், 233 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிமுக ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆளுநரைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக அரசுக்குத் தாங்கள் தந்து வரும் ஆதரவை மீட்டுக் கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில அரசாங்கம் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஓர் உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இது மீண்டும் கூவத்தூர் உல்லாச விடுதியில் அரங்கேறிய கூத்துகளை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

மற்ற அரசியல் தலைவர்களும் ஸ்டாலினின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையிலிருந்து புறப்பட்டு மும்மை சென்றடைந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.