Home நாடு இருமொழி திட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் மீது வழக்கு

இருமொழி திட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் மீது வழக்கு

839
0
SHARE
Ad

DLP-PRESS MEET-MAY 19கோலாலம்பூர் – 150 தமிழ்/இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள மே 19 இயக்கம், தமிழ்ப்பள்ளிகளில் தேவையின்றி திணிக்கப்படுவதாகப் பல தரப்புகளாலும் கருதப்படும்  இருமொழித்திட்டத்தை (DLP) எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளது.

தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் விவரங்களை
வழங்க பின்வரும் செய்தியாளர் சந்திப்பை மே 19 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது:

தேதி: 08.09.2017 (வெள்ளி)

நேரம்: 11.00 மணி காலை

இடம்: செந்தூல் கறி அவுஸ், செந்துல், கோலாலம்பூர்

DLP-PRESS MEET-MAY19-08092017இந்தச் சந்திப்பில் கலந்து வழக்கு குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள செய்தியாளர் நண்பர்களையும், ஆர்வலர்களையும் மே 19 இயக்கத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு:

கௌதம்
016 948 9218
தியாகு
016 628 5288